காகிதம் கிழிந்து போனால்
காவியம் புரிவதில்லை.
கனவு முடிந்து போனால்
உருவம் தெரிவதில்லை.
கண்ணீர் முடிந்து போனால்
சோகம் இருப்பதில்லை.
மலர்கள் கசங்கிப் போனால்
வாசம் இருப்பதில்லை.
கற்பனை தீர்ந்து போனால்
கவிதை கூட வருவதில்லை.
ஆனால்,
காதல் முடிந்தபிறகும் கூட
அந்த நினைவுகள்
இருந்து கொண்டே இருக்கும்…
அந்த நினைவுகள் உங்களுக்கு
வாழக் கற்றுக்கொடுக்கும்….
Sun APRIL 18, 2004