மனம் கொத்தி பறவை - குமுதம் விமர்சனம்


avatar

மனம் கொத்தி பறவை - குமுதம் விமர்சனம் Vm_14110
“டேய், ரேவதிக்கு எம்மேல லவ்டா’ - கண்ணன். “உசுருக்கு உசுரா காதலிக்குற ரெண்டு பேரையும் நாம சேர்த்து வச்சே ஆகணும்னு’ - கண்ணனின் நண்பர்கள்.

“கல்யாணத்தன்னிக்கு என்னைக் கடத்திட்டு வந்திருக்கீங்களே, நான் கண்ணனைக் காதலிக்கவே இல்லை லூஸுங்களா’ - ரேவதி. இப்படி சில கலாட்டாக்களின் தொகுப்புதான் “மனங்கொத்திப்பறவை.’

அடிவாங்கியே காதலில் ஸ்கோர் பண்ணுகிற கண்ணன் கேரக்கடருக்கு சிவகார்த்திகேயன் வெகு பொருத்தம். கேரக்டரின் அம்சமே சொதப்புவதுதான் என்பதால் இவரது நடிப்பில் நிகழும் சின்னச் சின்ன சொதப்பல்கள் பேலன்ஸ் ஆகிவிடுகின்றன. ரேவதியாக வரும் புதுமுகம் ஆத்மியா செழுமை, இனிமை, நடிப்பில் மட்டும் கொஞ்சம் வெறுமை. திருமணத்தின்போது கடத்தப்பட்டாலும் சரி, வெளியூரில் அரைகுறைக் காதலன் அண்ட் கோவிடம் மாட்டிக் கொண்டாலும் சரி இவரது ரியாக்ஷன் ரொம்பவே ஸ்லோமோஷன்.

சிங்கம்புலி, சூரி, ஷாம்ஸ், ஸ்ரீநாத் ஆகியோர் அடங்கிய நண்பர்கள் டீம்தான் படத்தின் நிஜ ஹீரோ. ஆத்மியாவின் முரட்டு அண்ணன்களிடம் இவர்கள் தவணை முறையில் அடிவாங்குவதும் புலம்புவதும் காமெடி ஸ்பெஷல்.

இளவரசுக்கு வழக்கம்போல் தறுதலைப் பையனுக்காக அப்பா கேரக்டர். ஆனாலும் ரசிக்க வைக்கிறார். ஆத்மியாவின் அப்பா நரேன், அவரது சித்தப்பா (யாரது, நல்ல செலக்ஷன்) ரவிமரியா, வனிதா ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

பல இடங்களில் ஒளிப்பதிவில் இலக்க தெரியாத தடுமாற்றம். கும்பகோணம், மன்னார்குடி என சுற்றிவரும் முதல் பாதிக்கான கதைக்களம் படத்துக்கு உயிரூட்டுகிறது. இமானின் பாடல்கள் ஜாலி கதைக்கு சுதி ஏற்றுகின்றன. செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத மாதிரி முதல் முக்கால் மணி நேரம் படத்தில் எக்கச்சக்க திணறல். ஆத்மியா திடீரென “எனக்கும் உன்னைப் பிடிக்கும்டா’ என்று சிவகார்த்திகேயனிடம் சரண்டர் ஆவதற்கு எங்குமே க்ளூ இல்லை.

இயக்குநர் எழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு கலகலப்பான காதல் கதையைத் தர வேண்டும் என களமிறங்கியிருக்கிறார். அங்கங்கே தடுமாறினாலும் ஜெயித்துவிட்டார்.

மனம்கொத்திப் பறவை - கலர்ஃபுல் பறவை

குமுதம் ரேட்டிங் - ஓகே.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!