அனுஷ்காவிற்காக காத்திருக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’


avatar

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 10 அல்லது 15-ந் தேதிகளுக்குள் முடித்து விட்டு, அக்டோபர் 12-ந் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் அனுஷ்கா செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பில் ரொம்பவும் பிஷியாக இருக்கிறார். இதற்காக ஜார்ஷியாவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது முடிந்த பின்னர் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்புக் குழுவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால், இப்போதைக்கு அனுஷ்கா இல்லாத காட்சிகளை படமாக்கி விட்டு, பிறகு அவரது காட்சிகளை எடுக்கலாம் என ‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்புக்குழு முடிவு செய்துள்ளதாம்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!