தர்மகாரியங்களுக்குப் பேர்போன குடும்பத்தின் வாரிசு காரைக்குடி கமலக்கண்ணன் (கார்த்தி). இவர்களின் ஒரே சொத்தான பாரம்பரிய வீட்டை ரயில்வே சுரங்கப் பாதைக்காக இடிக்க அதிகாரிகள் ஸ்கெட்ச் போடுகிறார்கள். வீட்டைக் காப்பாற்ற கார்த்தி, கவுன்சிலரிலிருந்து முதல்வர் வரைக்கும் பார்த்து உதவி கேட்கிறார். அவமானம்தான் பதிலாகக் கிடைக்கிறது. அரசியல்வாதிகளை அரசியல் ரூட்டிலேயே போய் மடக்கி கார்த்தி காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் கதை.
ஆரம்பத்தில் சாது, அப்புரம் அதிரடி சூது என்கிற கேரக்டரை கார்த்தி ரசித்த, ருசித்துச் செய்திருக்கிறார். கார்த்திக்கு சும்மா அறிமுகமாகி, அவராலேயே அவஸ்தைப்படுகிற ஆட்டோ டிரைவராக சந்தானம் அசத்துகிறார்.
கார்த்திக்கும் ப்ரணிதாவுக்குமான ரொமான்ஸ் ஏரியா “எங்களுக்கு இதுலல்லாம் உடன்பாடே இல்லை சார்’ என்று சொல்வதுபோலவே இருக்கிறது.
உள்ளூர் சாமியாராக இருந்து கார்த்தியின் ஐடியாவால் கார்ப்பரேட் சாமியாராகும் நாசர் கேரக்டர் பலே! வட்டித்தொழிலில் தெனாவெட்டு, அரசியலில் கொஞ்சம் அறியாமை என இரு முகம் காட்டும் ரமணியக்காவாக ராதிகாவை ரசிக்கலாம். கார்த்தியின் திடீர் அத்தையாக வரும் ரோஜாவின் வில்லத்தனத்தில் லாஜிக் இல்லை.
பிரகாஷ்ராஜ் அரசியல்வாதியாக வந்து அலப்பரை பண்ணுவதில் இது நூறாவது படமாக இருக்கலாம். “நட்புக்காக’ மட்டுமே ஒரே ஒரு சீனில் அனுஷ்கா இன்ஸ்பெக்டராக வந்துபோகிறார்.
முன்பு வந்து ஹிட்டான மசாலா படங்களின் பாடல்கள் போலவே இருக்க வேண்டும் என்ற கவனத்திலேயே ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
“வழக்கமான சிப்ஸை பாக்கெட்ல போட்டு, கேஸ் அடைச்சு, பளபளன்னு கொடுத்தா நம்மாளுங்க போட்டி போட்டு வாங்குறாங்கல்ல?’ போன்ற வசனங்கள் இன்றைய சமூகத்தைப் போட்டு வாங்குகின்றன. சேகுவேரா டிஷர்ட் போட்டவர்கள், தமிழ் அடையாள அரசியல்வாதிகள் போன்றவர்களையெல்லாம் போகிற போக்கில் கிண்டலடித்திருக்கிறார்கள்.
முதல் படத்திலேயே சம கால அரசியலை உரசிப் பார்த்திருப்பதற்காக இயக்குநர் ஷங்கர் தயாளைத் தட்டிக்கொடுக்கலாம். ஆனால், காமெடியில் உள்ள பலம் அடிப்படை கான்செப்ட்டில் இல்லாமல் போனதில்தான் சகுனி சறுக்கிவிட்டான்.
சகுனி - “தூள்’ பார்ட் 2
ஆரம்பத்தில் சாது, அப்புரம் அதிரடி சூது என்கிற கேரக்டரை கார்த்தி ரசித்த, ருசித்துச் செய்திருக்கிறார். கார்த்திக்கு சும்மா அறிமுகமாகி, அவராலேயே அவஸ்தைப்படுகிற ஆட்டோ டிரைவராக சந்தானம் அசத்துகிறார்.
கார்த்திக்கும் ப்ரணிதாவுக்குமான ரொமான்ஸ் ஏரியா “எங்களுக்கு இதுலல்லாம் உடன்பாடே இல்லை சார்’ என்று சொல்வதுபோலவே இருக்கிறது.
உள்ளூர் சாமியாராக இருந்து கார்த்தியின் ஐடியாவால் கார்ப்பரேட் சாமியாராகும் நாசர் கேரக்டர் பலே! வட்டித்தொழிலில் தெனாவெட்டு, அரசியலில் கொஞ்சம் அறியாமை என இரு முகம் காட்டும் ரமணியக்காவாக ராதிகாவை ரசிக்கலாம். கார்த்தியின் திடீர் அத்தையாக வரும் ரோஜாவின் வில்லத்தனத்தில் லாஜிக் இல்லை.
பிரகாஷ்ராஜ் அரசியல்வாதியாக வந்து அலப்பரை பண்ணுவதில் இது நூறாவது படமாக இருக்கலாம். “நட்புக்காக’ மட்டுமே ஒரே ஒரு சீனில் அனுஷ்கா இன்ஸ்பெக்டராக வந்துபோகிறார்.
முன்பு வந்து ஹிட்டான மசாலா படங்களின் பாடல்கள் போலவே இருக்க வேண்டும் என்ற கவனத்திலேயே ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
“வழக்கமான சிப்ஸை பாக்கெட்ல போட்டு, கேஸ் அடைச்சு, பளபளன்னு கொடுத்தா நம்மாளுங்க போட்டி போட்டு வாங்குறாங்கல்ல?’ போன்ற வசனங்கள் இன்றைய சமூகத்தைப் போட்டு வாங்குகின்றன. சேகுவேரா டிஷர்ட் போட்டவர்கள், தமிழ் அடையாள அரசியல்வாதிகள் போன்றவர்களையெல்லாம் போகிற போக்கில் கிண்டலடித்திருக்கிறார்கள்.
முதல் படத்திலேயே சம கால அரசியலை உரசிப் பார்த்திருப்பதற்காக இயக்குநர் ஷங்கர் தயாளைத் தட்டிக்கொடுக்கலாம். ஆனால், காமெடியில் உள்ள பலம் அடிப்படை கான்செப்ட்டில் இல்லாமல் போனதில்தான் சகுனி சறுக்கிவிட்டான்.
சகுனி - “தூள்’ பார்ட் 2