திருநங்கை ரோஸ் நடிக்கும் புதிய படத்திற்கு கிரிக்கெட் ஸ்கேண்டல் என்று பெயரிட்டுள்ளனர். இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர் திருநங்கை ரோஸ். வேறு டி.வி.க்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக ரோஸ் நடிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார்.
இந்தியாவிலேயே திருநங்கை இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், உலக அளவிலும் நடந்த கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டங்களை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. கதாநாயகன், இதர நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தயாராகிறது. படத்தின் துவக்க விழா பூஜை வருகிற 28ம்தேதி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படுகிறது.
இந்தியாவிலேயே திருநங்கை இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், உலக அளவிலும் நடந்த கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டங்களை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. கதாநாயகன், இதர நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தயாராகிறது. படத்தின் துவக்க விழா பூஜை வருகிற 28ம்தேதி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படுகிறது.