ஜீவாவிடம் ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி!


avatar

ஜீவா நடித்த ரெளத்திரம் படம் சரியாக போகாததால், அவரிடம் நஷ்டஈடு கேட்டுள்ளனர் தியேட்டர் அதிபர்கள். ஜீவா-ஸ்ரேயா நடிப்பில், கோகுல் இயக்கத்தில் வெளிவந்த படம் ரெளத்திரம். இப்படத்தை ஜீவாவின் அப்பா ஆர்.பி.சவுத்ரி தயாரித்து இருந்தார். தமிழ் தவிர இப்படம் தெலுங்கில் ரச்சா என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழியிலும் இப்படம் சரியாக ஓடவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் ஜீவாவிடம் ரூ.65 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கூறும்போது, தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ரூ.65 லட்சம் நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டது உண்மைதான். ஆனால் இப்போது வரை கொடுக்கவில்லை. இதுகுறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார்.

இதனிடையே ரெளத்திரம் படத்திற்கு நஷ்டஈடு தராததால், ஜீவாவின் இனி வரக்கூடிய படங்களை புறக்கணிக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!