சொத்துப் பிரச்னையை மையமாக வைத்து உருவாகும் மீன்கொத்தி!


avatar

மீன்கொத்தி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படம், அண்ணன், தம்பி இடையிலான சொத்துப் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. நாச்சியாரம்மன் பிலிம்ஸ் சார்பில் அழகன் தமிழ்மணி தயாரிக்கும் "மீன்கொத்தி" படத்தில், அவருடைய மகன் அஜய் கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கதாநாயகி, ஷோபனா நாயுடு. கதைப்படி, அண்ணன்-தம்பி இடையே சொத்துக்காக நடக்கும் போராட்டத்தில், அண்ணனை தம்பியும், தம்பியை அண்ணனும் போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள். இருவருக்கும் இடையே கூலிப்படை நுழைகிறது. அண்ணன்-தம்பி பகையை பயன்படுத்தி, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறது, கூலிப்படை. அந்த முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதே மீன்கொத்தி மொத்த படமும்.

அண்ணனாக தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணியும், தம்பியாக குடுமி மணியும் நடிக்கிறார்கள். கூலிப்படையில் ஒருவராக அஜய் கிருஷ்ணா வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சஞ்சய்ராம், இசையமைப்பாளர் தினா இசையமைக்கிறார். சென்னை, குற்றாலம், கொடைக்கானல், அச்சன்கோவில் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!